Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லியில் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டு பெண் பலாத்காரம்

ஆகஸ்டு 13, 2019 03:32

புதுடில்லி: உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டைச்சேர்ந்த 31 வயது பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது நண்பருடன் மதன்கிரி பகுதியில் வசித்து வந்தார். இவருடன் மேலும் மூன்று பேர் நண்பர்களாக பழகியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வசந்த்கஞ்ச் என்ற பகுதிக்கு அப்பெண்ணை காரில் அழைத்துச் சென்ற அந்த மூன்று நபர்களும், அப் பெண்ணை ஓடும் காரில் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக போலீசில் புகார் கூறியதையடுத்து தென்மேற்கு டில்லி சரக போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்